“மனைவிக்கு பயப்படும் கணவன்மார்கள் தான் அதிகம் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், நீங்களோ எனக்கு பயப்படுவதாய் தெரியவில்லையே”, என்று சுந்தரிடம் அலுத்துக் கொண்டாள் சுவாதி.
“ஆமாம். கதைகளிலும் ஜோக்குகளிலும் கூட அப்படித்தான் வருகிறது. என்ன காரணமாக இருக்கும்?”
சுந்தர் யோசித்தான்.
வினோதிற்கு தன் லேட்நைட் பார்ட்டியை தடை செய்து விடக்கூடாது என்ற பயம். கார்த்திக்கிற்கு, தான் ரேஸாடுவது தெரிந்து விடக் கூடாது. பிரேமிற்கு, சக ஸ்டெனோவிடம் பழக்கம்.
“பொய்.. பொய் சொல்வதுதான் பயத்திற்கு காரணம்”, என்ற சுந்தர், “இப்ப சொல்லு. நானும் உனக்கு பயப்படவா?”
“வேண்டாம்”, என்று கூறி அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
** மங்கையர் மலர் பெட்டிக் கதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை**
No comments:
Post a Comment